iThinkShare.com

Ads 468x60px

Contributors

Blogroll

About

Blogger news

Sunday 12 May 2013

ஆழ்துளை கிணறு தோண்டும் விதிகள்:

iThinkShare

ஆழ்துளை கிணறு தோண்டும் விதிகள்:

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல் என்ன?

ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து மரணங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் 2 ஆண்டுகளுக்கு முன் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, ஆழ்துளை கிணறு தோண்டுபவர் அதுகுறித்து 15 நாட்களுக்கு முன் மாவட்ட ஆட்சியர் அல்லது அவர் வசிக்கும் உள்ளாட்சி அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும்.

ஆழ்துளை கிணறு தோண்டும் இயந்திர நிறுவனத்தினர், அந்நிறுவனத்தை அரசிடம் பதிவு செய்தவராக இருக்க வேண்டும்.

ஆழ்துளை கிணறு தோண்டும்போது அதற்கு அருகில் கிணறு தோண்டுவது குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். அதில் கிணறு தோண்டுபவரின் முகவரி மற்றும் கிணறு தோண்டும் இயந்திர நிறுவனத்தின் முகவரி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

கிணறு தோண்டியதும் அதைச் சுற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும்.மேலும் கிணற்றைச்சுற்றி கான்கிரீட் மேடையையும் அமைக்க வேண்டும்.

கிணற்றின் வாய்ப்பகுதியை இரும்பு பிளேட் கொண்டு மூட வேண்டும்..கிணறு தோண்டி முடித்ததும் அந்த பகுதியை சுற்றி ஏற்படும் குழியை முற்றிலும் மூட வேண்டும்.

பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணற்றை அதன் அடிப்பாகம் வரை மண்ணிட்டு மூட வேண்டும். இந்த வழிகாட்டி நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும்.

0 comments:

Post a Comment

iThinkShare.com

Plz Share Ur Command Here