iThinkShare.com

Ads 468x60px

Contributors

Blogroll

About

Blogger news

Sunday, 30 June 2013

you can save some one's life please do share !!!

iThinkShare

You can save some one's life please do share !!!


We share jokes we share stupid pictures / video please share this and you can save some one's life please do share !!!
It's urgent..

 

IMP Latest updates Google launched an online software through which people can search there missing relatives in Uttarakhand.

link: http://google.org/personfinder/2013-uttrakhand-floods

Then, You can also request status via SMS by sending an SMS to 977330000 with the message: "Search person-name"



PLEASE NOTE: On active Person Finder sites, all data entered is available to the public and usable by anyone. Google does not review or verify the accuracy of this data.  

கூகுள் அறிவியல் போட்டியின் இறுதி சுற்றில் இந்திய மாணவி !

iThinkShare

கூகுள் அறிவியல் போட்டியின் இறுதி சுற்றில் இந்திய மாணவி !

கூகுள் நிறுவனம் நடத்திய அறிவியல் போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்தியாவின் பள்ளி மாணவி ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

13லிருந்து 18 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மட்டுமே பங்கேற்கும் அறிவியல் போட்டி ஒன்றை சில மாதங்களுக்கு முன் கூகுள் நிறுவனம் இணையதளத்தில் நடத்தியது.



இதற்காக, 120 நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் தங்கள் அறிவியல் கண்டுபிடிப்பு, திட்டப்பணிகளை அனுப்பி வைத்தனர். இந்த போட்டியில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 15 பேரின் பெயர்களை கூகுள் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் மொஹாலியை சேர்ந்த பதினோராம் வகுப்பு பயிலும் மாணவி சிரிஷ்டி ஆஸ்தனா இடம் பெற்றுள்ளார். வரும் செப்டம்பர் மாதம் 23-ம்தேதி அமெரிக்காவில் நடைபெறும் இறுதி சுற்றில் விஞ்ஞானிகள் முன்னிலையில் தனது அறிவியல் திட்டப்பணியை அவர் விளக்க உள்ளார்.

இந்த போட்டியில் வெல்பவருக்கு, 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதுமட்டுமல்லாது, நேஷனல் ஜியோகிராபிக் குழுவினருடன் கேலாபாகஸ் தீவுகளுக்கு 10 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரி சிரிஷ்டி ஆஸ்தனாவின் அறிவியல் (ப்ராஜக்ட்) திட்டப்பணி என்ன என்பதை அறிய வேண்டுமா..?

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை இயற்கை முறையில் படியிறக்கம் செய்து சுற்றுச்சூழலுக்கு தீங்கில்லாமல் பயன்படுத்தும் முறையை தான் சிருஷ்டி கண்டுபிடித்துள்ளார்.

Sunday, 2 June 2013

Newspaper Vendor to Study in IIM-Calcutta.

iThinkShare

Newspaper Vendor to Study in IIM-Calcutta.

N Shiva Kumar from Bangalore wouldn't have thought, even in his wildest dreams, that one day his inspirational tale would feature in the very newspapers that he has been selling since Class 6. But dreams do come true, albeit with a lot of hard work and determination. The newspaper-boy-t­urned-vendor has gained admission in the prestigious business school, IIM-Calcutta after cracking CAT last year.

 
Shiva, 23, a computer science student of Bangalore Institute of Technology, is the son of an illiterate mother and a father who was a truck driver. He started working as a newspaper delivery boy and for his debt-ridden family of four. Speaking about his struggles to TOI, Shiva says, "Every morning people would come home asking my father to return the money he had borrowed. My father had a truck. But there were more liabilities than what he could earn with it. When I was in Class 3 or 4, I sold flowers that my mother strung into garlands by the roadside.

It was only later that I found the job of newspaper boy.," His luck turned around when he requested a customer to fund his school education when he was unable to pay the tution fees, to which he agreed."I was studying in an ICSE school. In Class 9, I was asked not to come to school till I paid the fees. The next day, I approached the first customer I was delivering the paper to, Krishna Veda Vyasa, and requested him to fund me. He hesitated, and said he didn't even know me. I asked him to do a background check, and he found I was the topper there. I requested him to pay one term's fee, but he paid for the entire year. He continued funding me ever since. I owe it all to him," he said.

He soon found an opportunity to be a vendor and started his own agency when in Class 10.His work continued even when he got admission in an engineering college."It was hard work. I had to get up at 4am every day, deliver the papers and head to school. I had to skip breakfast to be on time for college, but would still be late. But now his life is set to change."Shiva is taking an education loan to fund his IIM course. So what does he want to do after graduating from IIM-C?"After my family stabilizes, I want to start a charitable institution, Educate India, by which I can help the underprivileged­ gain some education. I could achieve this because someone helped me. In turn, I want to help at least 10 people," he said.

Saturday, 1 June 2013

யாழ் நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 32 ஆண்டுகள்

iThinkShare
யாழ். நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 32 ஆண்டுகள்

தென்கிழக்காசியாவின் மிகப்பெரிய நூலமாக திகழ்ந்த யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 32 வருடங்கள் நிறைவடைகின்றன. யாழ்ப்பாணம் பொது நூலகம் 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிறிலங்கா அரசின் துணையுடன் சிறிலங்கா படைகளால் எரித்து சாம்பலாக்கப்பட்டது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது.

யாழ் நூலகம் 1933 ஆம் ஆண்டில் இருந்து கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ளது. முதலில் சிலரது தனிப்பட்ட சேகரிப்புகளுடன் நூலகம் ஆரம்பிக்கப்பட்டு, மிக விரைவில் உள்ளூர் தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒரு முழு நூலகமானது.

யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலும் தனிப்பட்டவர்களிடம் இருந்து வந்த பல நூல்கள், குறிப்பாக நூற்றாண்டுகள் பழமையான ஓலைச்சுவடிகள் 1800களில் யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்ட பல பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் போன்றவை இந்நூல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. நூலகத்தின் முதலாவது கட்டடம் 1959 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. 1936க்குப் பின்னர், நூலகம் யாழ் நகரசபையிடம் கையளிக்கப்பட்டு, யாழ்ப்பாணக் கோட்டைக்கு அருகே, புதிதாகக் கட்டப்பட்ட நகர மண்டபத்துக்கு அண்மையிலுள்ள இடமொன்றுக்கு மாற்றப்பட்டது.

யாழ்ப்பாண மாநகரசபை அந்தஸ்துக்குத் தரமுயர்த்தப்பட்டுப் புதிய சபை பதவியேற்றபின், இந்த நூலகத்துக்கான புதிய கட்டிடமொன்றைக்கட்டும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டன. பல்வேறு வழிகள் மூலம் இதற்கான நிதியைத் திரட்ட எடுத்த முயற்சிகள் பெரு வெற்றிபெற்றதாகச் சொல்லப்படுகிறது. நிறுவனத்துக்கான அடிப்படைகளைத் தீர்மானித்து வழிநடத்தும் நோக்கில், அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்த பல கல்வியாளர்களையும் பிரமுகர்களையும் உள்ளடக்கிய குழுவொன்று 1953 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. இக்குழு இது தொடர்பில் இந்திய நிபுணர்களினதும் உதவிகளைப் பெற்றுக்கொண்டது. இதற்கான கட்டிடத்தை வடிமைக்கும் பணியும் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர் நரசிம்மனிடம் ஒப்படைக்கப்பட்டது. திராவிடக் கட்டிடக்கலைப் பாணியைத் தழுவி இரண்டு தளங்கள் கொண்ட அழகிய கட்டிடமொன்று வடிவமைக்கப்பட்டது.

Tuesday, 28 May 2013

சுஜாதாவின் பத்து அறிவுரைகள்

iThinkShare

சுஜாதாவின் பத்து அறிவுரைகள்

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.


2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.

3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.

4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.

5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.

6. இந்தச் தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.

7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்), எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.

8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.

9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம். ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.

10. படுக்கப் போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.

Tuesday, 21 May 2013

Malayalam superstar Mohanlal celebrates his birthday today.

iThinkShare

Malayalam superstar Mohanlal celebrates his birthday today.

Mohanlal (born 21 May 1960), is an Indian film actor and producer best known for his work in Malayalam films. He was born in Pathanamthitta in south Kerala to Vishwananthan Nair and Santhakumary. He was raised in Mudavanmugal in Thiruvananthapuram (Trivandrum), Kerala, which was his maternal house. He now lives with his family in Thevara, ( in Kochi, Kerala). He married Suchitra, daughter of Tamil film producer K. Balaji on 28 April 1988. They have two children – Pranav and Vismaya.

Mohanlal has acted in over 300 Malayalam films and produced or co-produced over 35 films. His acting credits also include some Tamil, Hindi, Telugu, Kannada films. He has acted in 4 professional plays. He has also sung songs, most of them for the films he acted in.

Mohanlal's first non-Malayalam movie was the Tamil film "Iruvar"(1997), directed by Mani Ratnam. His first Hindi film was "Company"(2002) directed by Ram Gopal Varma.



In 2001, the Government of India honoured him with the Padma Shri.

He has won four Indian National Film Awards — two Best Actor Awards, one Special Jury Award for acting, and one Award for Best Film as producer along with six Kerala State Film Awards for Best Actor.

He was elected as most popular Keralite in a 2006 online poll conducted by CNN-IBN on the occasion of the 50th anniversary of Kerala's formation.

In 2009, he became the first actor to be given the honorary rank of Lieutenant Colonel in the Territorial Army of India.

He was also conferred an honorary Black Belt of Taekwondo by World Taekwondo Headquarters in Kukiwon by South Korean Government. He was the third Indian citizen to achieve this feat.

We wish the multitalented superstar a very happy birthday and a successful year ahead!

 

18-year-old Indian-American girl wins Young Scientist Award.

iThinkShare

18-year-old Indian-American girl wins Young Scientist Award.

18-year-old Indian-American girl develops device to Charge Cell Phones in Seconds, wins Young Scientist Award.

Eesha Khare, from Saratoga, California, is a co-winner of this year’s Young Scientist Award sponsored by Intel. The award comes with a $50,000 cash prize. She won the award for her battery-sized supercapacitor design which allows for recharging in just a few seconds. The award was part of Intel’s International Science and Engineering Fair. Khare’s supercapacitor is meant to serve as a replacement for a small battery, specifically those used in cell phones. She says the inspiration for her design came out of frustration from constantly finding her cell phone battery dead.



The supercapacitor she developed is small enough to fit inside a standard cell phone battery housing, and can be fully charged in just 20 to 30 seconds. As if that weren’t enough, it also has a much longer useful life offering 10,000 charge/recharge cycles instead of the 1,000 available now for batteries. The supercapacitor is based on nanochemistry, which Khare told the crowd during her acceptance speech is her main area of scientific interest. She plans to continue her research on the supercapacitor with the ultimate goal of replacing her cell phone battery. She noted that such a supercapacitor would also be useful for powering a wide variety of other devices, adding that it’s also flexible. It could be used to power devices embedded in clothes, she suggested, or as part of roll-top electronic devices.
 

iThinkShare.com

Plz Share Ur Command Here